தீபாவளி பண்டிகை 2021 |Deepavali Festival 2021
03-11-2021 அன்று மாலை 6 மணி அளவில் நம் பகுதி காவல் ஆய்வாளர் திரு. G. ஐயப்பன் அவர்களும் மதிப்பிற்குரிய உதவி ஆணையர் திரு. செம்பேடு பேபி அவர்களும் கே1 செம்பியம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு திடீரென வருகை தந்து நம் மாணவ மாணவியருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். தீபாவளி பண்டிகையை நம் மாணவர்கள் சிறப்பாக மனம் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்னும் எண்ணத்தில் நம் காவல் அதிகாரிகள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ந்து மகிழ்வித்தனர். நம் காவல்துறை அதிகாரிகளின் இச்செயல் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.